Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழில் ரணில்: விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடம்- இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை!

Go down

யாழில் ரணில்: விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடம்- இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை! Empty யாழில் ரணில்: விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடம்- இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை!

Post by oviya Fri Mar 27, 2015 1:35 pm

விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை சென்றிருந்த போதே மேற்கொண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றியும் வாழ்வாதாரத்தில் பின்னடைவுடனும் உள்ளனர். இதனால் இங்கு அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

எனவே வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கவும், வேலையில் இருந்து இடையில் விலகியவர்கள் மற்றும் வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய போதே மேற்கண்டவாறு பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,

விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கமைவாக யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை , கண்டி ஆகிய மாவட்டங்களை பொருளாதார வலயமாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்ததும் அதற்கான செயற்பாடுகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

வேலையில்லாப்பிரச்சினை வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை பூராகவும் உள்ளது. இதனால் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாங்கமானது குறுகிய கால திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதனூடாக நாட்டில் ஒற்றுமை, சட்ட ஆதிக்கத்திற்கு உட்படுத்தி பொதுத் தேர்தலின் பின்னர் 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டு வருகின்றது.

எனவே விவசாயத்திற்கு சிறந்த இடமாக இருக்கும் வடக்கு மாகாணத்தை சிறந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை முன்னேற்றுவதற்கு சிறந்த நடவடிக்கை எடுப்போம். அதற்கான நிதியினைப் பெற்றுத்தரவும் நாம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

இலங்கையில் இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர் எமது ஆட்சியில் 21 ஆம் நூற்றாண்டுகளுக்கு ஏற்ற மாற்றம் வடக்கில் ஏற்படுமாயின் முழுநாடும் மாற்றமடையும் எனவும் ரணில் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களையும் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதேவேளை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக யாழ் மீனவர் சமூகத்தினருடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு பிரதமர் ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum