Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டு. சிறைச்சாலையில் கைதி சடலமாக மீட்பு- யாழ்.வாகன விபத்தில் இருவர் பலி!

Go down

மட்டு. சிறைச்சாலையில் கைதி சடலமாக மீட்பு- யாழ்.வாகன விபத்தில் இருவர் பலி! Empty மட்டு. சிறைச்சாலையில் கைதி சடலமாக மீட்பு- யாழ்.வாகன விபத்தில் இருவர் பலி!

Post by oviya Fri Mar 27, 2015 1:27 pm

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி, பாலமுனை பிரதேசத்தினை சேர்ந்த அப்துல் ஹரீம் சேகுதாவூத் (70வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2008ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்துடன் இவர் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர் மீதுள்ள வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.வாகன விபத்தில் இருவர் பலி!

யாழ், அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் ஏழாலை மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 14 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum