Top posting users this month
No user |
ஆவணப்படத்தில் பெண்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்த வழக்கறிஞர்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
Page 1 of 1
ஆவணப்படத்தில் பெண்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்த வழக்கறிஞர்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை தயாரித்தது.
அந்த படத்தில் பேசிய வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் ஆகிய இருவரும் பெண்களுக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்ததாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், பெண் வழக்கறிஞர்கள் சம்மேளனம் சார்பில் அவர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையக்கூட தடை விதிக்க வேண்டும்.
மேலும், அவர்கள் கூறியவை மனிதாபிமானமற்ற, பாலின பாகுபாடு நிறைந்த, சற்றும் நியாயமற்ற கருத்து என்றும் பெண் இனத்தின் மாண்பினை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த வழக்கில், இருவரும் பெண்களுக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களை தெரிவித்தது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விடயத்தில் பெண் வழக்கறிஞர்கள் சம்மேளனத்துக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை தயாரித்தது.
அந்த படத்தில் பேசிய வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் ஆகிய இருவரும் பெண்களுக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்ததாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், பெண் வழக்கறிஞர்கள் சம்மேளனம் சார்பில் அவர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, ஏ.பி.சிங் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையக்கூட தடை விதிக்க வேண்டும்.
மேலும், அவர்கள் கூறியவை மனிதாபிமானமற்ற, பாலின பாகுபாடு நிறைந்த, சற்றும் நியாயமற்ற கருத்து என்றும் பெண் இனத்தின் மாண்பினை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த வழக்கில், இருவரும் பெண்களுக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களை தெரிவித்தது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விடயத்தில் பெண் வழக்கறிஞர்கள் சம்மேளனத்துக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum