Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கக்கூடாது: கொந்தளிக்கும் இனவாதிகள்

Go down

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கக்கூடாது: கொந்தளிக்கும் இனவாதிகள் Empty தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கக்கூடாது: கொந்தளிக்கும் இனவாதிகள்

Post by oviya Tue Mar 24, 2015 12:01 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தேசிய புத்தகசாலை கேட் போர்கூடத்தில் நடைபெற்றது.

இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது இனவாதத்தை தோற்றுவிக்கும். கடந்த காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அறிவோம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களுக்கு கூடுதல் அளுத்தம் கொடுத்து பெரிதாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் பிரதமரை விட எதிர்க்கட்சித் தலைவரே பிரபலமடைவதுடன், சர்வதேச ரீதியில் எதிர்க்கட்சியின் பிரசாரம் வெற்றியளித் துவிடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நிலையில் தினேஷ் குணவர்த்தனவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டாலும், அவர்கள் தேசிய நிறைவேற்று சபையில் அங்கத்துவம் வகிப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து தீர்மானங்களை எடுக்கின்றனர். எனவே இக்கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இவர்கள் கொடுக்க மாட்டார்.

அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அவர்களால் விமர்சிக்க முடியாது. இரண்டு பக்கத்திலும் கால்களை வைத்துக்கொண்டிருக்க எவராலும் முடியாது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கக்கூடிய பொருத்தமான நபர் தினேஷ் குணவர்த்தனவே என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சை

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை யார் வகிப்பது என்பது தொடர்பில் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பதவி வகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பல்வேறு கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஜே.வி.பி பிவித்துரு ஹெல உறுமய, புதிய இடதுசாரி முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுத்நதிர கட்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சியில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென சில தரப்பினர் கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது கட்சிக்கு வழங்குமாறு மஹஜன கட்சி ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரியுள்ளனர்.

இதேவேளை தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமய திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் பெரும்பான்மை பலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கொண்டிருப்பதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum