Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காணாமற்போனோர்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்! ஊடகத்திற்கு வெளியிடமாட்டோம்!

Go down

காணாமற்போனோர்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்! ஊடகத்திற்கு வெளியிடமாட்டோம்! Empty காணாமற்போனோர்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்! ஊடகத்திற்கு வெளியிடமாட்டோம்!

Post by oviya Sun Mar 22, 2015 1:23 pm

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கே எமக்கு பொறுப்பு உள்ளது, ஊடகங்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.ரீ.கெலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு பாரிய சேவையை செய்து வருகின்றது.

இதை அறியாது சில சிவில் அமைப்புக்கள் எமது ஆணைக்குழு முன் ஆர்பாட்டம் நடத்தியமை வருந்ததக்கதே, எனினும் இந்த சிவில் அமைப்புக்களை நாங்கள் கொழும்புக்கு அழைத்து எமது சேவைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கவுள்ளோம்.

2013 ஜனவரி முதல் பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பல சிபார்சுகளையும் செய்துள்ளோம்.

இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. எமது குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து ஆராய்வதே அவர்களின் பொறுப்பாகவுள்ளது.

எமது ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பு அறிக்கையை தயார் செய்து ஜனாதிபதிக்கு கொடுப்பதே அதை ஊடகங்களுக்கு வெளியிடுவதா இல்லையா என ஜனாதிபதியே தீர்மானிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum