Top posting users this month
No user |
சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு
Page 1 of 1
சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு எதிராக இன்று ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதி வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, அது சம்பந்தமான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்திருந்தார்.
அவர் பேசி முடித்த பின்னர், சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரான டிலான் பெரேரா அதற்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்டார்.
தமிழ் மக்கள் தமிழில் தேசிய கீதத்தை பாடும் உரிமையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அப்படியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
தனி நபர்களின் விருப்பங்களுக்கு அல்லாமல், இந்த விடயம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் நாட்டில் ஏனைய பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி விட்டு தென்பகுதி ஊடகவியலாளர்கள் தேசிய கீதம் தமிழில் பாட அனுமதி வழங்கப்பட்ட விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை காணமுடிகிறது.
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதி வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, அது சம்பந்தமான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்திருந்தார்.
அவர் பேசி முடித்த பின்னர், சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரான டிலான் பெரேரா அதற்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்டார்.
தமிழ் மக்கள் தமிழில் தேசிய கீதத்தை பாடும் உரிமையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அப்படியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
தனி நபர்களின் விருப்பங்களுக்கு அல்லாமல், இந்த விடயம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் நாட்டில் ஏனைய பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி விட்டு தென்பகுதி ஊடகவியலாளர்கள் தேசிய கீதம் தமிழில் பாட அனுமதி வழங்கப்பட்ட விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை காணமுடிகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum