Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேர்தலுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச

Go down

தேர்தலுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச Empty தேர்தலுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச

Post by oviya Thu Mar 19, 2015 12:42 pm

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எப்படியாவது மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக நேரடியான அழுத்தங்களை கொடுக்காது, பிறர் ஊடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அழுத்தங்களை கொடுத்து வருகிறார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட மகிந்த ஆதரவாளர்கள் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது அரசியல் பிரவேசம் பற்றி தற்போது நேரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

இலங்கையில் இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வகித்தவர்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுவர்.

ஜே.ஆர். ஜெயவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் இதற்கு சிறந்த உதாரணம்.

எனினும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ச, 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், 4 வருடங்களில் அதாவது 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார்.

போர் வெற்றியை தேர்தல் பிரசாரமாக முன்வைத்து அந்த தேர்தலில் பெரும் வெற்றியை பெற்ற மகிந்த, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவையும் அவருக்கு உதவியவர்களையும் அரசியல் ரீதியாக கடுமையாக பழி தீர்த்தார்.

இதனையடுத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஒரு இரு முறை மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் 18 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றிக்கொண்டார்.

ஒரு ஜனாதிபதியாக எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி வகிக்க முடியும் என்ற வகையில் 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தான் ஓய்வுபெறுவதற்காக அரசியலுக்கு வரவில்லை என மகிந்த ராஜபக்ச அப்போது கூறியிருந்தார். எவ்வாறாயினும் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் ஆட்சி அதிகார ஆசை அவரை விட்டு போகவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இழந்த மகிந்த, நிறைவேற்று அதிகாரமிக்க பிரதமராக முயற்சித்து வருகிறார். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்ட மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அடித்தளத்தை உறுதிப்படுத்ததும் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார்.

மேல் மாகாணத்தை சேர்ந்த உள்ளூராட்சி பிரதிநிதிகளை சந்தித்த அவர், இன்று (19) சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம், பொலன்நறுவை மற்றும் கேகாலை மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு கொழும்பு நாராஹேன்பிட்டியில் அபயராம விகாரையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க தான், அவர்களை சந்திப்பதாக மகிந்த ராஜபக்ச கூறினாலும் பொதுத் தேர்தலில் களமிறங்கி கீழ் மட்டத்தில் தனது பலத்தை உறுதிசெய்யவே அவர், இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அத்துடன் தோல்வி பயத்தில் இருந்தும் முந்தைய ஆட்சியில் இருந்த பிரமுகர்களுக்கு மகிந்தவை விட்டால் கதியில்லை. இந்த அரசியல் நிலைமையை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச மிக சாதூர்யமாக அரசியல் காய்களை நகர்தி வருகிறார் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum