Top posting users this month
No user |
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள்!
Page 1 of 1
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள்!
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை விசேட நீதிமன்ற நடவடிக்கையாக கருதி, கொலை குற்றச்சாட்டு வழக்கை நான்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்குமாறு சட்டமா அதிபர் சுவன்ஜித் விஜேதிலக்க, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் வழக்கின் கீழ் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் கொலை வழக்கொன்று விசாரிக்கப்பட்டால், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அறங்கூறுநர் சபை கோரும் சந்தர்ப்பம் கி்டைக்காது எனக் கூறப்படுகிறது.
இதனை விசேட நீதிமன்ற நடவடிக்கையாக கருதி, கொலை குற்றச்சாட்டு வழக்கை நான்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்குமாறு சட்டமா அதிபர் சுவன்ஜித் விஜேதிலக்க, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் வழக்கின் கீழ் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் கொலை வழக்கொன்று விசாரிக்கப்பட்டால், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அறங்கூறுநர் சபை கோரும் சந்தர்ப்பம் கி்டைக்காது எனக் கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum