Top posting users this month
No user |
பாடசாலை மீதான பற்றுதல் உயர்ந்த கல்வி பாரம்பரியத்திற்கு அத்திவாரமிடும்: சி.சிறீதரன்
Page 1 of 1
பாடசாலை மீதான பற்றுதல் உயர்ந்த கல்வி பாரம்பரியத்திற்கு அத்திவாரமிடும்: சி.சிறீதரன்
கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி அதன் முதல்வர் தலைமையில் கடந்த 17ம் திகதி நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கண்டாவளை கோட்ட கல்வி அதிகாரி இராசகுலசிங்கம், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான தவபாலன் புஸ்பராசா, முன்னாள் பிரதி கல்விப்பணிப்பாளர்களான வைரமுத்து செல்வராசா, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய குருக்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் மூத்த கிராமம் ஒன்றில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அஸ்திவாரமாக அமைந்துள்ள இந்த பாடசாலையின் வரலாற்றையும் அது கண்டிருக்கின்ற வளர்ச்சிகளையும் நான் அறிவேன்.
மருத நிலமாக இருக்கும் இந்த மண்ணின் பிள்ளைகள் இங்கிருந்து பல்வேறு உயர்ந்த துறைகளை நோக்கி பயணித்து பெயர்சொல்லக்கூடிய உயர்ந்த பதவிகளில் உள்ளார்கள்.
இங்கு ஒரு பாடசாலையும் அதன் மீது அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற பற்றுதலும் இப்பாடசாலை வளர்ச்சி நோக்கி செல்வதற்கு காரணமாக அமைகின்றது, இந்த எண்ணமும், இயக்கமும் இங்கேயே ஒரு கல்வி பாரம்பரியத்தை உருவாக்கி இந்தக்கிராமத்தின் அடையாளமாக அது திகழ வழிவகுக்கும்.
இந்த பாடசாலையின் எல்லாத்துறைகளின் வளர்ச்சியிலும் எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இதில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கண்டாவளை கோட்ட கல்வி அதிகாரி இராசகுலசிங்கம், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான தவபாலன் புஸ்பராசா, முன்னாள் பிரதி கல்விப்பணிப்பாளர்களான வைரமுத்து செல்வராசா, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய குருக்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் மூத்த கிராமம் ஒன்றில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அஸ்திவாரமாக அமைந்துள்ள இந்த பாடசாலையின் வரலாற்றையும் அது கண்டிருக்கின்ற வளர்ச்சிகளையும் நான் அறிவேன்.
மருத நிலமாக இருக்கும் இந்த மண்ணின் பிள்ளைகள் இங்கிருந்து பல்வேறு உயர்ந்த துறைகளை நோக்கி பயணித்து பெயர்சொல்லக்கூடிய உயர்ந்த பதவிகளில் உள்ளார்கள்.
இங்கு ஒரு பாடசாலையும் அதன் மீது அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற பற்றுதலும் இப்பாடசாலை வளர்ச்சி நோக்கி செல்வதற்கு காரணமாக அமைகின்றது, இந்த எண்ணமும், இயக்கமும் இங்கேயே ஒரு கல்வி பாரம்பரியத்தை உருவாக்கி இந்தக்கிராமத்தின் அடையாளமாக அது திகழ வழிவகுக்கும்.
இந்த பாடசாலையின் எல்லாத்துறைகளின் வளர்ச்சியிலும் எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum