Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியின் இலங்கை விஜயம்! ஒரு வரலாற்றுப் பதிவு

Go down

மோடியின் இலங்கை விஜயம்! ஒரு வரலாற்றுப் பதிவு Empty மோடியின் இலங்கை விஜயம்! ஒரு வரலாற்றுப் பதிவு

Post by oviya Sun Mar 15, 2015 11:46 am

இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட அந்தப் பயணத் தின் போது தான், இந்திய, இலங்கை சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
அதுமட்டுமன்றி, ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையின் போது, கடற்படைச் சிப்பாய் ஒருவர் அவர் மீது நடத்திய தாக்குதலும், வரலாற்றில் முக்கிய பதிவாகியது.

அதற்குப் பின்னர், நேற்று முன்தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்தியப் பிரதமர் எவரும் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.

இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்குப் பின்னர், கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து, இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி, நேற்றிரவு இங்கிருந்து புறப்பட்டுச் சென்றது வரையான அவரது இரண்டு நாள் இலங்கைப் பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கும், அதையடுத்து, 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கைக்கும் இடையில், நீண்டகாலமாகவே நெருக்கமான உறவும் வரலாற்றுத் தொடர்புகளும் இருந்து வந்துள்ளன.

மிக அருகருகாக, சிறியதொரு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கும், இந்தியப் பெரு நிலப்பரப்பும், இலங்கைச் சிறுதீவும், சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்தில், அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசார உறவுகளால் எப்போதும், பிணைந்தே இருந்து வந்துள்ளன.

இலங்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள், இந்தியாவிலும், இந்தியாவில் நிகழும் மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில், நெருக்கம் காணப்பட்டிருக்கிறது.

இந்தியாவும் இலங்கையும் பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த ஆறு தசாப்த காலத்தில், இந்தியத் தலைவர்களின் இலங்கைப் பயணங்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கியிருக்கின்றன.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, இந்தியத் தலைவர்களின் இலங்கைப் பயணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு மேற்கொண்ட பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவரது முதலும், கடைசியுமான பயணம் அது. அப்போது அவர் மூன்று வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்தார்.

அவர் இலங்கையில் இருந்த போது, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நுவரெலிய, காலி, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, ஹற்றன், பருத்தித்துறை, சிலாபம் ஆகிய இடங்களுக்குச் சென்று 31 கூட்டங்களில் உரையாற்றியிருந்தார்.

இந்தியாவிலும், இலங்கையிலும், சுதந்திரத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவரது அந்தப் பயணம் அமைந்திருந்தது. அதையடுத்து, 1931ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு, இலங்கைக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.

மனைவி கமலா, மகள் இந்திராவுடன் அவர் நுவரெலியாவில், விடுமுறையைக் கழிப்பதற்காக அப்போது வந்திருந்தார். அப்போது, நேரு பிரதமராகவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியப் பிரதமர் பதவிகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், அதுவே முதல் இலங்கைப் பயணமாக அமைந்தது. எனினும், அது ஒரு அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணம் அல்ல.

இந்தியாவும், இலங்கையும் சுதந்திரம் பெற்ற பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவரின் அரசுமுறை இலங்கைப் பயணம் இடம்பெற்றது 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆகும்.

இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு மேற்கொண்ட அந்தப் பயணத்தின் போது, பல்வேறு இடங்களில் உரையாற்றியிருந்தார். பின்னர்,

1957 ஆம் ஆண்டு மே மாதம், புத்தபெருமான் அவதரித்த 2500 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி. இலங்கையில் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, மீண்டும் இலங்கை வந்திருந்தார். அப்போது அவருடன் கூடவே, இந்திராகாந்தியும் இலங்கை வந்தார்.

அநுராதபுரத்தில் நடந்த வெசாக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர்கள் சிறப்பு ரயிலில் அங்கு பயணம் செய்தனர். அநுராதபுரத்தில் புத்த ஜெயந்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட புதிய நகரமான ஜெயந்தி மாவத்தையையும் அப்போது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்திருந்தார்.

மீண்டும், 1962ம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இலங்கைக்கு மற்றொரு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது, இலங்கை பாராளுமன்றத்தில் அவர் 1962 ம் ஆண்டு, ஒக்ரோபர் 23ம் திகதி உரையாற்றினார். அதுவே இலங்கை பாராளுமன்றத்தில் இந்தியத் தலைவர் ஒருவர் நிகழ்த்திய முதலாவது உரையாகும்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர், இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற இந்திராகாந்தி, இலங்கைக்கு இரண்டு முறை அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். 1967ம் ஆண்டு செப்ரெம்பர் 18ம் திகதி தொடக்கம், 21ம் திகதி வரையான, காலப் பகுதியில், இந்திரா காந்தியின் முதலாவது அரசு முறைப் பயணம் இடம்பெற்றிருந்தது.

இரண்டாவது முறையாக, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை இலங்கையில் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, 1973 ஏப்ரல் 28ம் திகதி, இலங்கை பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் உரை இடம்பெற்றது.

இந்திராகாந்தியை அடுத்து, இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற மொராய்ஜி தேசாய் 1979ம் ஆண்டில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, 1979 பெப்ரவரி, 06ம் திகதி அவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்குப் பின்னர், 1987ம் ஆண்டு தான், இந்தியப் பிரதமர் ஒருவரின், இலங்கைக்கான அரசுமுறைப் பயணம் இடம்பெற்றது.

இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட அந்தப் பயணத்தின் போது, தான், இந்திய, - இலங் கை சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

அதுமட்டுமன்றி, ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையின் போது, கடற்படைச் சிப் பாய் ஒருவர் அவர் மீது நடத்திய தாக்குதலும், வரலாற்றில் முக்கிய பதிவாகியது.

அதற்குப் பின்னர், நேற்று முன்தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்தியப் பிரதமர் எவரும் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.

ராஜீவ் காந்திக்குப் பின்னர், வி.பி.சிங், சந்திரசேகர், தேவகௌடா, பி.வி.நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் போன் றவர்கள் இந்தியப் பிரதமராகப் பதவியில் இருந்த போதும், அவர்கள் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை.

சார்க் மாநாட்டுக்காக இந்தியப் பிரதமர்கள் இலங்கைக்கு வந்திருந்த போதும், அது இருதரப்பு அரசுமுறைப் பயணமாக இருக்கவில்லை. அயல்நாடாக இருந்த போதிலும், இந்தியப் பிரதமர்களால் 28 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தை, மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறார் நரேந்திர மோடி.

அதுமட்டுமன்றி, 1979 ஆம் ஆண்டுக்கு, மொராய்ஜி தேசாய் இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்குப் பின்னர், நரேந்திர மோடியின் உரை கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் பல்வேறு வரலாற்று அத்தியாயங்களை எழுதி வைத்திருக்கிறது. இலங்கையில் அதிக இடங்களுக்கு சென்ற இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றையும் அவர் எழுதியிருக்கிறார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்த ஒரு இந்தியத் தலைவர் என்ற பெருமையை மகாத்மா காந்தி ஒருவர் மட்டும் தான், வைத்திருந்தார். அவர் அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும், ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, இலங்கைத் தீவின் பல பகுதிகளையும் சுற்றி வந்திருந்தார்.

அதற்குப் பின்னர், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள், அரசுமுறைப் பயணத்தின் போதும், தனிப்பட்ட பணயத்தின் போதும், அனுராதபுரம் நுவரெலியா, கண்டி போன்ற இடங்களுக்குச் சென்றிருந்தாலும், வடக்கிற்குச் சென்றதில்லை.

எனினும், 1959 ம் ஆண்டு ஜுன் 16ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த, இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராஜேந்திர பிரசாத், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னர் மோடி தான், யாழ்ப்பாணத்துக்குச் சென்ற முதல் இந்தியத் தலைவராவார். வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்ட ஒரே இந்தியப் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடியையே சாரும்.

ராஜீவ் காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய - இலங்கை உறவுகளிலும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இந்தக் காலகட்டம் தான் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த காலமாகும்.

போரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களித்த இந்தியா, போருக்குப் பிந்திய இலங்கையில், பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் மூலம், இலங்கையுடன் இந்தியா தனது நெருக்கத்தை மட்டும் வலுப்படுத்திக் கொள்ளவில்லை.

அதற்கும் அப்பால், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கையும் உடைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்திருந்தது.

அதன் விளைவாக, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு திடீரென அதிகரித்ததுடன், இந்தியா எதையும் செய்ய முடியாததொரு நெருக்கடிக்குள்ளும் சிக்கியிருந்தது. ஆனால், ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையும், இந்த நிலையை முற்றாகவே மாற்றியமைத்திருக்கிறது.

இரு தரப்பு உறவுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது நரேந்திர மோடியின் இந்தப் பயணம். இது இருநாடுகளுக்குமே நன்மையளிப்பதாக இருந்தாலும், இந்தியா அடையப்போகும் அனுகூலங்கள் தான் அதிகமாக இருக்கும்.

அதனைக் காலப்போக்கில் அனைவரும் உணரமுடியும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum