Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Go down

நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி Empty நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Post by oviya Sun Mar 15, 2015 11:45 am

5 நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் நாடுகளான சீசெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நள்ளிரவில் தலைநகர் டெல்லி திரும்பினார்.

முதலில் சீசெல்ஸ் சென்ற மோடி அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அந்நாட்டில் இந்திய-சீசெல்ஸ் கூட்டணியில் உருவான ரேடாரையும் பிரதமர் மோடி இயக்கிவைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மொரீஷியஸ் சென்ற அவர், அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

அதன்பின் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கை சென்றடைந்த அவருக்கு கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் நிலையில் மீனவர் பிரச்சினையில் நீண்ட கால தீர்வை உருவாக்கவேண்டும் என்றும் அதற்கு சில காலங்களாகும் என்று தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ் மக்களுக்காக இந்திய அரசு கட்டிக்கொடுத்த வீடுகளை ஒப்படைத்தார்.

அந்நாட்டில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு புறப்பட்ட பிரதமர் மோடி, நள்ளிரவு மீண்டும் தலைநகர் டெல்லி திரும்பினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum