Top posting users this month
No user |
பெண்கள் தினத்தை ஆர்ப்பாட்டமாக கொண்டாடிய நவுரு அகதிகள்!!
Page 1 of 1
பெண்கள் தினத்தை ஆர்ப்பாட்டமாக கொண்டாடிய நவுரு அகதிகள்!!
அவுஸ்திரேலியா, நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டு அகதிகள், நேற்றைய பெண்கள் தினத்தினை வித்தியாசமான முறையில் ஒரு ஆர்ப்பாட்ட வடிவில் கொண்டாடியுள்ளனர் .
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அதி உயர் தடுப்பு காவலுக்கு ஒப்பான நவுரு முகாமில் அடைத்து வைத்துள்ளமை யாவரும் அறிந்த உண்மை.
அவுஸ்திரேலியா அரசாங்கம் பெண்கள் சிறுவர்கள் தடுப்பு முகாம்களில் இல்லை என்று கூறி வருகின்ற நேரத்தில் நேற்றைய தினம் பல புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் பல பெண்கள் பல சிறார்கள் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த நவுரு பொலிசார் முகாமுக்குள் சென்று பலரைக் கைது செய்துள்ளதுடன் பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து அனைத்து உடுப்புகளையும் களைந்து சோதனை செய்துள்ளனர்.
பெண்கள் தினத்தில் பெண்களின் உடுப்புகள் அனைத்தும் அகற்றி சோதனை செய்தமை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் மாபெரும் மனித உரிமை மீறலை காட்டுகின்றது என்று அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அதி உயர் தடுப்பு காவலுக்கு ஒப்பான நவுரு முகாமில் அடைத்து வைத்துள்ளமை யாவரும் அறிந்த உண்மை.
அவுஸ்திரேலியா அரசாங்கம் பெண்கள் சிறுவர்கள் தடுப்பு முகாம்களில் இல்லை என்று கூறி வருகின்ற நேரத்தில் நேற்றைய தினம் பல புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் பல பெண்கள் பல சிறார்கள் சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த நவுரு பொலிசார் முகாமுக்குள் சென்று பலரைக் கைது செய்துள்ளதுடன் பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து அனைத்து உடுப்புகளையும் களைந்து சோதனை செய்துள்ளனர்.
பெண்கள் தினத்தில் பெண்களின் உடுப்புகள் அனைத்தும் அகற்றி சோதனை செய்தமை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் மாபெரும் மனித உரிமை மீறலை காட்டுகின்றது என்று அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum