Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரு நாடுகளுக்கிடையிலான உறவின் இடைவெளியை மூடுவதே எமது நோக்கம்: இராப்போசன விருந்தில் சுஷ்மா

Go down

இரு நாடுகளுக்கிடையிலான உறவின் இடைவெளியை மூடுவதே எமது நோக்கம்: இராப்போசன விருந்தில் சுஷ்மா Empty இரு நாடுகளுக்கிடையிலான உறவின் இடைவெளியை மூடுவதே எமது நோக்கம்: இராப்போசன விருந்தில் சுஷ்மா

Post by oviya Sat Mar 07, 2015 11:57 am

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
இந்த இராப்போசன விருந்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,

இந்திய வெளிவிவகார அமைச்சராக முதல்முறையாக இலங்கைக்கு வந்துள்ளேன். ஆனால் இலங்கை எனக்கு புதியது அல்ல. நான் இங்கு பலமுறை வந்துள்ளேன்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இந்த அழகிய தீவுக்கு வந்திருக்கிறேன்.

முதலில் நான் இலங்கை அரசாங்கத்துக்கும், எனக்கும் எனது குழுவினதுக்கும் வெளிவிவகார அமைச்சர் அளித்த விருந்துக்காகவும் எனது உண்மையான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று ஹோலி பண்டிகை. ஹோலி ஒரு நிறங்களின் விழா என்பதை அறிவீர்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த விழாவைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்திருக்கிறோம்.

இந்த பண்டிகை வசந்த காலத்தின் வருகையின் குறியீடாகும். மகிழ்ச்சியின் முன்னறிவிப்பாகும். எமது இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையின் பிரதிபலிப்பாக இது இருக்கும் என நம்புகிறேன்.

ஹோலி இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது இருதரப்பு உறவுகளில் புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல், கலாசார ரீதியாக பின்னிப் பிணைந்துள்ளன.

இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் இடைவெளியை மூடுவதே எமது நோக்கம்: சுஷ்மா சுவராஜ்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இடைவெளியை மூடும் வகையில் தமது விஜயம் உயர்மட்ட விஜயமாக அமைந்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர நேற்று இரவு அளித்த விருந்துபசாரத்தின் போதே சுஷ்மா இதனைக்குறிப்பிட்டார்.

ஏற்கனவே இந்தியாவுக்கு, இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயம் வெற்றியுடன் முடிவடைந்ததாக சுஷ்மா தெரிவித்தார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் கடந்த சில வருடங்கள் முக்கியமானவையாகும்.

இரண்டு நாடுகளிலும் மாற்று அரசாங்கங்களுக்கான வாக்குகளை மக்கள் அளித்தனர் என்று சுஷ்மா கூறினார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum