Top posting users this month
No user |
Similar topics
எதிர்ப்பை மீறியது பிபிசி: வெளியானது "இந்தியாவின் மகள்" ஆவணப்படம் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
எதிர்ப்பை மீறியது பிபிசி: வெளியானது "இந்தியாவின் மகள்" ஆவணப்படம் (வீடியோ இணைப்பு)
கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது.
டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.
அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர்.
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.
பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கற்பழிப்பு கொலை குற்றவாளியை பேட்டி எடுக்க அனுமதித்ததை கண்டித்து டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து டெல்லி பொலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த பேட்டியை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை நேற்று இரவு வெளியிட்டது.
பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி இன்று காலையில் லண்டன் தொலைக்காட்சியில் இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.
அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர்.
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.
பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கற்பழிப்பு கொலை குற்றவாளியை பேட்டி எடுக்க அனுமதித்ததை கண்டித்து டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து டெல்லி பொலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த பேட்டியை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை நேற்று இரவு வெளியிட்டது.
பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி இன்று காலையில் லண்டன் தொலைக்காட்சியில் இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» “இந்தியாவின் மகள்” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வக்கீல்
» நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
» மக்களிடம் ஒற்றுமையை போதிக்கும் உன்னத தர்கா (வீடியோ இணைப்பு)
» நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
» மக்களிடம் ஒற்றுமையை போதிக்கும் உன்னத தர்கா (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum