Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உரிய சாட்சியங்களுடன் ஊழல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்: அமைச்சர் ஹர்ச டி சில்வா

Go down

உரிய சாட்சியங்களுடன் ஊழல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்: அமைச்சர் ஹர்ச டி சில்வா Empty உரிய சாட்சியங்களுடன் ஊழல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்: அமைச்சர் ஹர்ச டி சில்வா

Post by oviya Mon Feb 23, 2015 12:11 pm

ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரியான சாட்சியங்கள் முன்வைக்கப்படாமல் நபர்களை கைது செய்து வழக்கு தாக்கல் செய்வதானது அவர்கள் இலகுவாக விடுதலையாக வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் என கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க தேவையான சாட்சியங்களுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக ஊழல், மோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

எனினும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் ஹர்ச டி சில்வாவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் சம்பந்தமாக நான் பிரதமருடன் அண்மையில் பேசினேன். குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் சம்பந்தமான சாட்சியங்களை சேகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் நான் வெளியிட்ட மோசடியான கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக மேலும் தகவல்களை பெறமுடிந்துள்ளது. அடுத்த சில தினங்களில் அவற்றை பகிரங்கப்படுத்த எண்ணியுள்ளேன்.

இதுவரை எவரும் அறியாத பல ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum