Top posting users this month
No user |
மஹிந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்: ரணில் உறுதி
Page 1 of 1
மஹிந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்: ரணில் உறுதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன் எனும் அடிப்படையில் கூறுகிறேன் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நான் 90ம், 2000ம் ஆண்டுகளில் பிரதமராகவிருந்த போது மேற்குலக நாடுகளுடன் சிறந்த நல்லுறவை வலுப்படுத்தியிருந்தேன், எனினும் மஹிந்த அரசாங்கம் இந்த நட்புறவை நிர்மூலமாக்கியுள்ளது
இந்நிலையில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை மீள வலுப்படுத்தி கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளேன் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த அரசாங்கம் சீனா தன்னை பாதுகாக்கும் என்ற நோக்கில் மேற்குலக நாடுகளுடன் பகையை வளர்த்து கொண்டு இந்தியாவை விட்டு விலகி சென்றது.
சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வீதி, துறைமுகம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களை வட்டிக்கடன் அடிப்படையிலேயே மேற்கொள்கின்றது.
மேலும் சீனாவின் ஆயுதக் கப்பல் இருதடவை இலங்கைக்கு வந்து சென்றமை இந்திய பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை மீண்டும் அம் மக்களுக்கே வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளேன் என பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்த சரியான விபரங்களை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்படும் எனில் அங்குள்ளவர்களை விடுதலை செய்து அம்முகாம்களை மூடிவிட தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் தான் வரலாறு குறித்தே கதைத்து வருகின்றேன், எதிர்கால இருப்பு பற்றி நான் ஒரு போதும் பேசவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நான் 90ம், 2000ம் ஆண்டுகளில் பிரதமராகவிருந்த போது மேற்குலக நாடுகளுடன் சிறந்த நல்லுறவை வலுப்படுத்தியிருந்தேன், எனினும் மஹிந்த அரசாங்கம் இந்த நட்புறவை நிர்மூலமாக்கியுள்ளது
இந்நிலையில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை மீள வலுப்படுத்தி கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளேன் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த அரசாங்கம் சீனா தன்னை பாதுகாக்கும் என்ற நோக்கில் மேற்குலக நாடுகளுடன் பகையை வளர்த்து கொண்டு இந்தியாவை விட்டு விலகி சென்றது.
சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வீதி, துறைமுகம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களை வட்டிக்கடன் அடிப்படையிலேயே மேற்கொள்கின்றது.
மேலும் சீனாவின் ஆயுதக் கப்பல் இருதடவை இலங்கைக்கு வந்து சென்றமை இந்திய பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை மீண்டும் அம் மக்களுக்கே வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளேன் என பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்த சரியான விபரங்களை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்படும் எனில் அங்குள்ளவர்களை விடுதலை செய்து அம்முகாம்களை மூடிவிட தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் தான் வரலாறு குறித்தே கதைத்து வருகின்றேன், எதிர்கால இருப்பு பற்றி நான் ஒரு போதும் பேசவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum