Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடகிழக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படும் காலம் மிக விரைவில்: கயந்த கருணாதிலக்க

Go down

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படும் காலம் மிக விரைவில்: கயந்த கருணாதிலக்க Empty வடகிழக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படும் காலம் மிக விரைவில்: கயந்த கருணாதிலக்க

Post by oviya Wed Feb 18, 2015 1:33 pm

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான காலம் மிக விரைவில் உருவாக்கப்படும். என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு ஊடகவியலாளர்களின் நிலமைகளை அவதானிக்க மேற்படி இரு மாகாணங்களுக்கும் விரைவில் விஜயம் மேற்கொள்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நேற்றைய தினம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது வடமாகாணத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் ஆகியன கலந்து கொண்டிருந்தன.

இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டமைப்பு ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சீர்ப்படுத்தப்படாத பழைய நிலையிலேயே உள்ளமையினால் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக வடகிழக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் முன்னர் போன்று ஊடகவியலாளர்களை கொலை செய்தல் மற்றும் ஊடகவியலாளர்களை கடத்திச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் இல்லாமல் போயுள்ளனவே தவிர மற்றபடி பின்தொடர்தல், அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் காண்காணிக்கப் படுதல் போன்ற ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்வதாக சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான நிலமைகளிலிருந்து வடகிழக்கு ஊடகவியலாளர்களை பாதுகாக்குமாறும், தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரமாக செயற்படும் நிலை வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர், தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள், ஊடகவியலாளர்கள் குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிகம் அறிந்திருக்கின்றார்கள்.

அந்தவகையில் சில கட்டமைப்பு மாற்றங்களை செய்து வடகிழக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படும், காலம் மிக விரைவில் உருவாக்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர்.

மேற்படி இரு மாகாணங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள ஊடகவியலாளர்களின் நிலமைகள் குறித்து நேரில் பார்வையிடுவேன். எனவும் அமைச்சர் குறித்த நிகழ்வில் உறுதியளித்திருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum