Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய மீனவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரச அதிபர் மீது மாறியது: மன்னாரில் பதற்றம்

Go down

இந்திய மீனவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரச அதிபர் மீது மாறியது: மன்னாரில் பதற்றம் Empty இந்திய மீனவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரச அதிபர் மீது மாறியது: மன்னாரில் பதற்றம்

Post by oviya Mon Feb 16, 2015 12:56 pm

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து மன்னாரில் மீனவர் சங்கத்தினால் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மீனவ சம்மேளன தலைவர் அல்பிரட் ஜஸ்ரின் சொய்சா தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம், மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களையும் சேர்ந்த மீனவர்கள் இன்று திங்கட்கிழமை தொழிலுக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் ஜனாதிபதிக்கான மனு ஒன்றை மாவட்ட அரச அதிபரிடம் சமர்ப்பிக்க, பேரணியில் ஈடுபட்டவர்கள் சென்றனர். எனினும் ஒருவரை மட்டுமே மாவட்டச் செயலகத்துக்குள் அனுமதிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மீனவ சங்கப்பிரதிநிதிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அல்லது எல்லாப் பிரதிநிதிகள் முன்னிலையிலும் வெளியே வந்து மனுவைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கோரினர்.

இதனை ஏற்க அரச செயலகம் மறுத்ததால் ஆத்திரமடைந்தவர்கள், அந்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மாவட்ட செயலக வாகனங்களையும் வெளியில் செல்ல விடாது தடுத்தனர்.

அத்துடன் இ.போ.சா. பிரதான பஸ் நிலையம் மற்றும் தனியார் பஸ் நிலையங்களையும் மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் வரை அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். நிலைமை மோசமானதை அறிந்த மேலதிக அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்ரினிடம் இருந்து மனுவை பெற்று கொண்டதுடன் விரைவில் அதற்கு தீர்வு பெற்று தருவதாக கூறினார்.

குறித்த மனு ஜனாதிபதி, பிரதமர், வட மாகாண முதல்வர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum