Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமரின் சட்டம் தெவரப்பெருமவுக்கு மாத்திரமா?: ஐ.தே.கட்சியினர் கேள்வி

Go down

பிரதமரின் சட்டம் தெவரப்பெருமவுக்கு மாத்திரமா?: ஐ.தே.கட்சியினர் கேள்வி Empty பிரதமரின் சட்டம் தெவரப்பெருமவுக்கு மாத்திரமா?: ஐ.தே.கட்சியினர் கேள்வி

Post by oviya Sun Feb 15, 2015 11:18 am

போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 5 நாளில் பிணை வழங்கப்பட்டது.
எனினும் சிறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கடந்த ஒன்றரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சிறிய காயம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு பொலிஸார் கூட பிணை வழங்க முடியும்.

எனினும் தெவரப்பெருமவுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதன் காரணமாகவே அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவிக்கின்றனர்.

போலி ஆவணம் தயாரித்த திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 5 நாளில் பிணை வழங்கப்பட்டது. ஹெரோயின் வியாபாரி துமிந்த சில்வா கைது செய்யப்படவோ விளக்கமறியலில் வைக்கப்படவோ இல்லை.

இந்தநிலையில், தெவரப்பெரும தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சில காலங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க கத்தியால் குத்த முயற்சித்ததன் காரணமாகவே அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியுள்ளனர்.

தெவரப் பெருமவுக்கு தண்டனை வழங்கப்படுவது கட்டாயம் என்ற போதிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் செயற்படுவது கீழ் மட்டத்தில் இருக்கும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இது கட்சிக்கு கடும் பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum