Top posting users this month
No user |
யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்பிப்பு : மாற்றமில்லை : ஐ.நா உறுதி
Page 1 of 1
யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்பிப்பு : மாற்றமில்லை : ஐ.நா உறுதி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கையை சமர்பிப்பதில் எந்தவித மாற்றங்களும் இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ் விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
யுத்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிப்பதை தள்ளிப்போடுமாறு இலங்கை அரசாங்கம் கோரி வருகின்றது.
இந்நிலையில் இவ் அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும்,
எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை குறித்து அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது 28வது அமர்வில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஆராய்ந்து 28வது அமர்வின் போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு,
இவ்விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவீ.பிள்ளை சர்வதேச விசாரணைக்குழுவொன்றை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
யுத்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிப்பதை தள்ளிப்போடுமாறு இலங்கை அரசாங்கம் கோரி வருகின்றது.
இந்நிலையில் இவ் அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும்,
எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை குறித்து அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது 28வது அமர்வில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஆராய்ந்து 28வது அமர்வின் போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு,
இவ்விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவீ.பிள்ளை சர்வதேச விசாரணைக்குழுவொன்றை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum