Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியல் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு நிகழலாம் இளைஞர்கள் மனம் தளரக்கூடாது: கி.சேயோன்

Go down

அரசியல் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு நிகழலாம் இளைஞர்கள் மனம் தளரக்கூடாது: கி.சேயோன் Empty அரசியல் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு நிகழலாம் இளைஞர்கள் மனம் தளரக்கூடாது: கி.சேயோன்

Post by oviya Sat Feb 14, 2015 12:43 pm

அரசியல் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு நிகழலாம் ஆனால் தமிழர்களின் தாகம் ஒன்றுதான் அது நிச்சயம் என்றோ ஒருநாள் நிறைவேறும் மாறாக தற்காலிகமான மாற்றங்களை நினைத்து தமிழ்மக்களும் குறிப்பாக இளைஞர்கள் மனம் தளரக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணித்தலைவர் கி.சேயோன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை இன்று தனது அலுவலகத்தில் சந்தித்து இன்றைய அரசியல் களநிலவரங்கள் பற்றி கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துரைக்கையில்,

இன்றைய காலச்சூழ்நிலை பற்றி அனைவரும் புரிந்து கொண்டு செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும் இணைந்த வடகிழக்கில் ஒரு சுதந்திரமானதும், கௌரவமானதுமான ஒரு தீர்வே ஒட்டுமொத்த தமிழ்மக்களினதும் கட்சியினதும் நிலைப்பாடாகும்.

இதனை யாராலும் மாற்றமுடியாது ஆனால் இன்றைய சூழலில் தற்காலிகமான சில அரசியல் மாற்றங்களை நினைத்து மனம் தளராமல் எமது கடமையை சரியாக செய்கின்றபோது இளைஞர்களாகிய நாங்கள் தமிழ் சமூகத்தையும் ஆகுதியாகிய எமது உறவுகளையும் மனதில் நினைத்து நீதிக்கு பங்கமில்லாமல் கடமையுணர்வாக செயற்படுகின்றபோது எமது அடிப்படை தளத்தை மாற்றமுடியாது.

இன்று தமிழ்மக்கள் மத்தியில் இருந்து பல வல்லூறுகளை புதிய ஆட்சிமாற்றத்தின் மூலம் அகற்றி இருக்கின்றோம் இதனைத்தீர்மானித்தவர்கள் வடகிழக்கு மக்களே இனிவரும் காலங்களிலும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் பல வல்லூறுகளை வீட்டுக்கு அனுப்ப தயாராக இருக்கின்றார்கள்.

அரசியல் என்பது தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பலமான ஆயுதமாக இருந்து வருகின்றது அந்த பலமான ஆயுதத்தினை மேலும் பலப்படுத்த தமிழ்மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்கச்செய்யவேண்டும் அப்போது எமது பலம் உலகலாவிய ரீதியில் வெளிக்கொணரப்படும்.

எமது இனத்தின் விடுதலைக்காகவேண்டி எமது வாக்குப்பலத்தினை பயன்படுத்த வேண்டியது இளைஞர்களாகிய நாம் ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இலங்கை தமிழரசிக்கட்சியின் இளைஞரணி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது மேலும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இணைந்து கொண்டு செயலாற்ற முன்வரவேண்டும்.

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தமுடிவு அனைவராலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தனிப்பட்ட எமக்காக அன்றி எமது இனத்தின் விடிவிற்காக பல தடைகளை தாண்டி வேலைசெய்யவேண்டிய நேரத்தில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு எமது தாகத்தினை வெளிப்படுத்தி வெற்றி காணவேண்டும் இது அரசியல் கட்சியல்ல இதனை ஒரு விடுதலை இயக்கமாகத்தான் நான் பார்க்கிறேன்.

பல உயரிய உத்தமர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்டதொன்றுதான் இந்த இளைஞரணியாகும். ஒரு இனத்தினுடைய விடுதலைக்கு இழக்கவேண்டியதற்கு மேல் இழந்த ஒரு இனம் தமிழ் இனம் ஆகவே அந்த தாகத்தினை இலகுவாக மறைந்து போக விடமுடியாது “கீழே விழவிழ எழுவான் தமிழன் எழுந்தபின்னும் படைப்பான் வரலாறு” இது எமது இனத்தின் தாரகமந்திரம் எனக்கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum