Top posting users this month
No user |
வரலாற்று சிறப்புமிக்க கல்லடி மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்
Page 1 of 1
வரலாற்று சிறப்புமிக்க கல்லடி மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்
மட்டக்களப்பு, கல்லடி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன, ஜீனோர்த்தன, அஸ்டபந்தன, நவகுண்டபக்ஸ, இராஜகோபுர மஹா கும்பாபிசேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்கதும் முன்னூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததுமான இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் வியாழக்கிழமை ஆரம்பமானது.
மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தினர்.
கும்பாபிசேக கிரியைகள் யாவும் வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர், சிவாச்சாரிய திலகம், ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் கலந்துகொண்ட சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டது. திங்கட்கிழமை காலை 6.50தொடக்கம் 7.25மணி வரையுள்ள சுபவேளையிவல் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.
நேற்று காலை விசேட கிரியைகள்,யாகம்,கும்ப பூஜை என்பன நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல தூபி கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின் ஆலயங்களும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
இந்த கும்பாபிசேக நிகழ்வின்போது பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்கதும் முன்னூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததுமான இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் வியாழக்கிழமை ஆரம்பமானது.
மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தினர்.
கும்பாபிசேக கிரியைகள் யாவும் வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர், சிவாச்சாரிய திலகம், ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் கலந்துகொண்ட சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டது. திங்கட்கிழமை காலை 6.50தொடக்கம் 7.25மணி வரையுள்ள சுபவேளையிவல் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.
நேற்று காலை விசேட கிரியைகள்,யாகம்,கும்ப பூஜை என்பன நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல தூபி கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின் ஆலயங்களும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
இந்த கும்பாபிசேக நிகழ்வின்போது பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum