Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாண மீனவர்கள் அதிருப்தி

Go down

இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாண மீனவர்கள் அதிருப்தி Empty இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாண மீனவர்கள் அதிருப்தி

Post by oviya Mon Feb 09, 2015 1:24 pm

இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாண மீனவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதால் அதனை தடுத்து நிறுத்த கடற்படையினர் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும் அண்மைக் காலமாக இந்திய மீனவர்கள் கனிசமான அளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதில்லை என யாழ்ப்பாண மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் ரக மீன்பிடிப் படகுகளினால் தமது மீன்பிடி வலைகள் சேதமடைவதாகத் தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் சுமார் 75000 முதல் 100, 000 வரையில் தமக்கு வலைகள் சேதமடைந்ததனால் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து எவ்வித முறைப்பாடுகளும் மீனவர்கள் தரப்பிலிருந்து கிடைக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய இலங்கை தலைவர்கள் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்ள உள்ள காரணத்தினால் இவ்வாறு கடற்படையினர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டு கொள்வதில்லையா என யாழ்ப்பாண மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum