Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மொழி பிரச்சினைக்கு தீர்வை வழங்கினார் வியாழேந்திரன்

Go down

மொழி பிரச்சினைக்கு தீர்வை வழங்கினார் வியாழேந்திரன் Empty மொழி பிரச்சினைக்கு தீர்வை வழங்கினார் வியாழேந்திரன்

Post by oviya Thu Dec 17, 2015 1:36 pm

மொழிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மொழி வளத்தை மேம்படுத்துவதற்கும் மொழி பெயர்ப்பு சபையொன்றை ஸ்தாபித்தல் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மொழி ரீதியான பிரச்சினையே, இன பிரச்சினைக்கு வித்திட்டமையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறான ஒரு நிலை மீண்டும் உருவாகுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மொழி, ஏட்டில் மாத்திரமே காணப்படுவதாகவும், அது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களிலும் பாரிய தமிழ் பிழைகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனியார் துறை நிறுவனங்களில் தமிழ் பிழைகள் மிக குறைவாக காணப்படுவதாகவும், அரச நிறுவனங்களிலேயே அதிகளவிலான தமிழ் பிழைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது கடமைகளை தாய்மொழியிலேயே செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.

சிங்களமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் தாய்மொழி கட்டாயமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

அதேபோன்று, மொழியும், சமயமும் கட்டாயமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பாராளுமன்றத்தில் இன்று கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum