Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகத்தின் வெள்ளத்திற்கு என்ன காரணம்? முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

Go down

தமிழகத்தின் வெள்ளத்திற்கு என்ன காரணம்? முதல்வர் ஜெயலலிதா அறிக்கை Empty தமிழகத்தின் வெள்ளத்திற்கு என்ன காரணம்? முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

Post by oviya Tue Dec 08, 2015 2:14 pm

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலதாமதமாக 28-10-2015 அன்று துவங்கியது.

பின்னர் ஒருசில நாட்களில் மிக அதிக அளவு கனமழை பொழிந்ததன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னரே, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். அதன்படி அரசு அதிகாரிகளும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தில் 4 கட்டங்களில் கனமழை பெய்தது.

8-11-2015 மற்றும் 10-11-2015 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 26.6 செ.மீ. மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளானது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் 38 செ.மீ. அளவுக்கு பெருமழை பெய்தது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13-11-2015 அன்று 32.6 செ.மீ. மழை பெய்தது. அதிகப்படியான மழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். 15-11-2015 மற்றும் 16-11-2015 ஆகிய நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின.

குறிப்பாக 15-11-2015 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம் மற்றும் மாமல்லபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம், செங்குன்றம் மற்றும் சோழவரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒரே நாளில் 23 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை மழை பெய்தது.

இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், உபரிநீர் திறந்து விடப்பட்டதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததோடு மட்டுமல்லாமல், பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

மழையின் பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 1-12-2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக, மீண்டும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.

குறிப்பாக தாம்பரம் பகுதியில் அதிகப்படியாக 49.4 செ.மீ. மழை பெய்தது. பெருமழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து 65 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum