Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை

Go down

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை Empty தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை

Post by oviya Tue Dec 08, 2015 2:11 pm

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதுகுறுித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், குமரி கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிக்கு சென்றுள்ளது.

புதிதாக நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழ்நாடு அருகே உள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட மழையின் அடிப்படையில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

அதுபோல செவ்வாய்க்கிழமை (இன்று) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஆங்காங்கே அடுத்த இரு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» லட்சத்தீவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், புதுச்சேரியில் மழை
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» ஆந்திராவில் கனமழை: வெள்ளக்காடாய் மிதக்கும் மாவட்டங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum