Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்? - புரட்டிப் போட்டது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் தானா?

Go down

சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்? - புரட்டிப் போட்டது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் தானா? Empty சென்னையை அடையாறு உருட்டியெடுத்தது ஏன்? - புரட்டிப் போட்டது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் தானா?

Post by oviya Tue Dec 08, 2015 1:56 pm

அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி எவ்வாறு சரிந்து இறங்குகிறது என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.
கடல்மட்டத்தை நோக்கிய ஆற்றின் பயணம் எவ்வாறு அடி அடியாக இறங்கி வருகிறது என்பதை 'கூகுள் எர்த்' கூறுகின்ற கடல்மட்ட உயரத்தளவின்படி கணக்கிட்டுப் பார்க்கலாம். எவ்வளவோ வெள்ளம் சென்றாலும் காவிரி பள்ளிபாளையத்திற்குள் புகுந்ததில்லை, பவானியை மேவியதில்லை. இந்த ஆறு மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது?

ஆற்றின் தோற்றுவாயான செம்பரம்பாக்கம் ஏரி, கடல்மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் இருக்கிறது. சென்னையின் பெருவாரியான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 35 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன.

திருவல்லிக்கேணி 30 அடி உயரத்திலும், சென்ட்ரல் இருப்பூர்தி நிலையம் 18 அடி உயரத்திலும், புரசைவாக்கம் 23 அடி உயரத்திலும் இருக்கின்றன. இதில் வேளச்சேரியிலுள்ள ஏரிக்குத் தெற்குப் பகுதி கடல்மட்டத்திலிருந்து வெறும் 14 அடி உயரமே இருக்கிறது. கொட்டிவாக்கத்திலுள்ள கண்ணகி நகர் என்னும் பகுதி கடல்மட்டத்திலேயே ( 0 அடி) இருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் தாழ்வான நிலமட்டத்தைப் பற்றிய எளிய கணக்கீடு இருந்தாலே எங்கெங்கு வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதை யாரும் உணரலாம்.

சுமார் 62 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 0 அடி உயரமுள்ள கடல்மட்டத்திற்கு அடையாற்றில் திறந்துவிடப்படுகின்ற தண்ணீர் ஆற்றுப் படுகையின் வழியே வடிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு ஆற்றின் வழி சிறிதளவே ஆனாலும் தொடர்ச்சியாக, சரிவாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். கடல்மட்டத்திலிருந்து ஆற்றுப் படுகையின் உயரத்தைக் காண்பதன் மூலம் அந்தச் சரிவைப் புரிந்துகொள்ள முடியும். செம்பரம்பாக்கத்திலிருந்து இறங்கி வரும் அடையாற்றுத் தண்ணீர் குரோம்பேட்டைக்கு மேற்கே சென்னை வெளிவட்டச் சாலையை (பைபாஸ்) ஒட்டிப் பாய்கையில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி என்னும் அளவுக்குத் தாழ்ந்து வந்துவிடுகிறது.

அடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டிய அடையாற்றுப் படுகை கடல் மட்டத்திலிருந்து வெறும் 12 அடி என்ற தாழ்நிலையை அடைந்து விடுகிறது. அங்கிருந்து கடலைச் சேரும்வரை அடையாறு தொடர்ச்சியாகச் சரிந்து இறங்குவதில்லை.

அடுத்தடுத்து வரும் அடையாற்றின் படுகைகள் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது. இதை 'கூகுள் எர்த்' செயலியில் ஒவ்வொரு இடத்தையும் சுட்டி வைத்து அளந்து உணரலாம். திறந்துவிடப்படும் வெள்ளம் ஆற்றின் தங்குதடையின்றிப் பாயாமல் தேங்கி நிரம்பிய பின் வழிவது என்னும் முறைப்படிதான் நகர்கிறது.

விமான நிலையத்திலேயே 12 அடிக்குத் தாழ்ந்த அடையாற்றுப் படுகை, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில் 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. 35 அடிவரை முன்னுள்ள வழி உயரமாய் இருக்கப்போய் பக்கவாட்டில் வெள்ளம் கரையுடைத்து விமான நிலையத்தில் தேங்கியிருக்க வேண்டும்.

விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய அடையாறு நந்தம்பாக்கத்தையொட்டிய இடத்தில் மீண்டும் 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. அதற்கடுத்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாற்றுப் படுகை 30 அடி என்னும் அளவுக்கு உயரமாக இருக்கிறது. நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள பாலத்திற்கு வரும்வரை (NH45) இந்தப் பத்தடிக்கு நீர் நின்று படுகை முழுக்கத் தேங்கவேண்டும்.

பாலம் தாண்டியவுடன் திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி அளவுக்கு மீண்டும் தாழ்கிறது. அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டிய அடையாற்றுப்படுகை மீண்டும் 28 அடிக்கு உயர்ந்திருக்கிறது. 28 அடி வரை தேங்கும்போது தண்ணீர் பக்கவாட்டில் உடைத்துவிட்டிருக்க வேண்டும். அங்கிருந்து அண்ணாசாலை பாலத்தை நெருங்கும் முன்படுகை மீண்டும் 12 அடிக்குத் தாழ்கிறது. சைதை பாலத்தைத் தாண்டியபின் ’டர்ன்பல்ஸ் சாலை’ என்ற பாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி உயரம். அதைத் தாண்டி திடீர்நகர் என்ற பகுதியை வந்தடையும் அடையாறு, கடல்மட்டத்திலிருந்து 0 அடி என்ற நிறைவை அடைந்துவிடுகிறது.

அங்கிருந்து கடல்வரை சென்று கலப்பது ‘முழுக்க முழுக்கத் தேங்கி அதன்பின் வழியும்’ வகையால்தான். அடையாற்று வழி முழுக்கவே ‘தேங்கி தேங்கி பத்திருபது அடி உயர வெள்ளத்தேக்கமாகி பிறகு வழிந்து, மீண்டும் தேங்கி மீண்டும் சரிந்து’ என்பதாகவே இருக்கிறது. இத்தகைய ஆற்றுப் படுகையால் திடீரென்று ஏற்பட்ட மிகுவெள்ளம் வலுவில்லாத கரைப்பகுதியை மீறிப்பாய்ந்து ஊருக்குள் புகுந்துவிட்டது. ஆற்றுப்படுகையே ஏற்றத் தாழ்வாக இருக்கும்போது அதன் வழிநெடுக ஆக்கிரமிப்புகளும் அடைப்புகளுமாக இருந்தால் என்னாவது ? அதுதான் நடந்தது.

சென்னையை புரட்டிப் போட்டது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் தானா?

சென்னை: சென்னையின் வரலாறு காணாத வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது மட்டுமே காரணமா? இதில் அரசு உரிய அக்கறை காட்டப்படவில்லையா? என பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு.செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum