Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள்

Go down

வடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள் Empty வடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள்

Post by oviya Tue Dec 08, 2015 1:56 pm

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணமல்போனவர்களின் உறவுகள் கூறியிருக்கின்றனர்.
இன்றைய தினம் மேற்படி காணாமல்போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர்.

குறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே உறவுகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதன்போது காணாமல்போனவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில், எங்களுடைய பிள்ளை களை படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள், நாங்கள் படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றோம்.

அவர்கள் காணாமல்போனமைக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 3 வருடங்களில், எந்தவிதமான முன்னேற்றத்தையும் எமக்கு காண்பிக்கவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் விசாரணைக்கு வருகின்றார்கள். எனவே நாங்கள் ஆணைக்குழு அமர்வுகளைப் புறக்கணிக்கின்றோம். அதனையும் மீறி நடைபெற்றால் அமர்வு இடம்பெறும் பகுதிக்கு முன்பாக நாங்கள் சத்தியா கிரகங்களை நடத்துவோம். மீறி நடைபெற்றால் ஆணைக்குழுவுக்கு நாங்கள் செருப்பால் அடிப்போம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum