Top posting users this month
No user |
இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
Page 1 of 1
இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக் கெதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு நகரில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை, சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இந்த ஆர்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சவூதி அரசினால் விதிக்கப்பட்ட ”கல்லெறிந்து கொல்லுதல்” எனும் மரண தண்டனைக்கு எதிரான சுலோகங்கள் பலவற்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
பெண்களின் வாழ்வு மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை சவூதி அரசு மறுக்கிறது. இவற்றுக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தளர்த்துமாறு ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் சவூதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடதக்க விடயம்.
நேற்று மாலை, சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இந்த ஆர்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சவூதி அரசினால் விதிக்கப்பட்ட ”கல்லெறிந்து கொல்லுதல்” எனும் மரண தண்டனைக்கு எதிரான சுலோகங்கள் பலவற்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
பெண்களின் வாழ்வு மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை சவூதி அரசு மறுக்கிறது. இவற்றுக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தளர்த்துமாறு ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் சவூதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடதக்க விடயம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum