Top posting users this month
No user |
மன்னாரில் கரையொதுங்கிய சடலத்தை மீட்டுத்தரக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
மன்னாரில் கரையொதுங்கிய சடலத்தை மீட்டுத்தரக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள இந்திய மீனவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு, இராமேஸ்வரம் மீனவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் திகதி கடற்றொழில் அதிகாரிகளின் அனுமதியுடன் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் குறித்த எந்தவித தகவல்களையும் அறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று மாலை மன்னார் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துனர்.
அத்துடன் உயிரிழந்தவர் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஐந்து அம்சக் கோரிக்கையினை முன்வைத்து இராமேஸ்வர மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 800க்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை சுமார் 10 கோடிக்கும் அதிகமான வருவாய் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்றொழிலாளர்களும், 20 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்றொழில் சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பபை இழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட சடலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அளவி தெரிவித்தார்.
கடந்த மாதம் 28ஆம் திகதி கடற்றொழில் அதிகாரிகளின் அனுமதியுடன் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் குறித்த எந்தவித தகவல்களையும் அறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று மாலை மன்னார் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த சடலத்தை மீட்ட மன்னார் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துனர்.
அத்துடன் உயிரிழந்தவர் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஐந்து அம்சக் கோரிக்கையினை முன்வைத்து இராமேஸ்வர மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 800க்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை சுமார் 10 கோடிக்கும் அதிகமான வருவாய் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்றொழிலாளர்களும், 20 ஆயிரத்திற்கும் அதிகமான கடற்றொழில் சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பபை இழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட சடலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அளவி தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum