Top posting users this month
No user |
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
Page 1 of 1
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல் வட்டாரங்களில் இருந்து மேற்குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மஹிந்த ராஜபக்சவின் விளம்பரங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாமை மற்றும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்ப விடாமல் கட்டணத்தை திருப்பியனுப்ப நிர்ப்பந்தம் செய்தமை தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு இன்று சமுகமளிக்குமாறு மஹிந்த ராஜபகசவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளதால், விசாரணைக்கு அவரால் சமுகமளிக்க முடியவில்லை என்று மஹிந்தவின் சட்டத்தரணிகள் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தனர்.
அத்துடன் மஹிந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாட்டு தாரரின் தரப்பு சாட்சியங்களின் அறிக்கை தமக்கு கிடைக்காத நிலையில், அதனை குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்றும் மஹிந்தவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல் வட்டாரங்களில் இருந்து மேற்குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மஹிந்த ராஜபக்சவின் விளம்பரங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாமை மற்றும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்ப விடாமல் கட்டணத்தை திருப்பியனுப்ப நிர்ப்பந்தம் செய்தமை தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு இன்று சமுகமளிக்குமாறு மஹிந்த ராஜபகசவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளதால், விசாரணைக்கு அவரால் சமுகமளிக்க முடியவில்லை என்று மஹிந்தவின் சட்டத்தரணிகள் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தனர்.
அத்துடன் மஹிந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாட்டு தாரரின் தரப்பு சாட்சியங்களின் அறிக்கை தமக்கு கிடைக்காத நிலையில், அதனை குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்றும் மஹிந்தவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum