Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள்

Go down

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் Empty கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள்

Post by oviya Wed Nov 18, 2015 12:45 pm


அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருமாறும், மாகாணங்களில் காணப்படுகின்ற 15000திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திய கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி, தற்போது லேகவுஸ் அருகில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை இடைமறித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.



அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தில் நின்றவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த 7 மாத காலமாக தாம் பொறுப்பு கூற வேண்டிய அனைத்து தரப்பினருடனும் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கான தீர்வு எட்டப்படாத நிலையில், குருநாகல் நகரில் கடந்த ஐந்தாம் திகதி தொடர் உண்ணாவிரத போராட்டமொன்றை தாம் ஆரம்பித்திருந்ததாகவும், இன்று 15 நாட்கள் கடந்துள்ள போதிலும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் இதுவரை கலந்துரையாடல்களை நடாத்தவில்லை எனவும் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடமேல் மாகாணத்தில் 3400, மேல் மாகாணத்தில் 3000, மத்திய மாகாணத்தில் 2000, கிழக்கு மாகாணத்தில் 2600, வட மாகாணத்தில் 2500, ஊவா மாகாணத்தில் 1000, வடமத்திய மாகாணத்தில் 500, தென் மாகாணத்தில் 382, சப்ரகமுவ மாகாணத்தில் 1000 என்ற அடிப்படையில் மாகாண சபை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய ரீதியில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக ஒன்றிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு நிதிப் பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதி்லும், அரசாங்கம் அமைச்சரவைக்காக பாரியளவிலான நிதியை தேவையற்ற விதத்தில் செலவிட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

21 கோரிக்கைகளை முன்வைத்து களனி பல்கலைக்கழக மாணவ சங்கத்தினர் பிரதம நிர்வாக கட்டடத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதம நிர்வாக கட்டடத்திற்கு அதிகாரிகளை பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ மாணவர்கள் சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum