Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின் நாட்டில் பாரிய பிரச்சினை உருவெடுக்கும் - ஆனந்தசங்கரி

Go down

கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின் நாட்டில் பாரிய பிரச்சினை உருவெடுக்கும் - ஆனந்தசங்கரி Empty கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின் நாட்டில் பாரிய பிரச்சினை உருவெடுக்கும் - ஆனந்தசங்கரி

Post by oviya Mon Nov 16, 2015 12:21 pm

சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தற்காலிகமாக புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதுவே அரசியல் கைதிகள் விடயத்தில் தற்காலிகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழ் அரசியல் கைதிகள் தாம் செய்த குற்றத்திற்கு அனுபவிக்க வேண்டிய தண்டனையை விடவும் அதிகளவிலான தண்டனையை அனுபவித்துள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் துணிவான தீர்மானமொன்றை ஜனாதிபதி எடுக்க வேண்டும் எனவும், அதற்கு பக்கபலமாக தான் இருப்பதாகவும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ்.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்படாத பட்சத்தில், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது எச்சரிக்கை கிடையாது என தெரிவித்த வீ.ஆனந்தசங்கரி, எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதை தாம் முன்பாகவே கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடுதலை கூட்டணி ஆர்ப்பாட்டம்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்று ஜனாதிபதி தலைமையில் முடிவு ஒன்று கிடைக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum