Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய மீனவர்கள் கோரிக்கை

Go down

படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய மீனவர்கள் கோரிக்கை Empty படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய மீனவர்கள் கோரிக்கை

Post by oviya Sat Nov 14, 2015 12:16 pm


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விடுதலையான இந்திய மீனவர்கள் 126 பேரும் நேற்றிரவு ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது. படகுகளை இலங்கை மீனவர்கள் பயன்படுத்துவார்கள் என கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 126 பேருடன் 46 விசைப்படகுகள், இலங்கை கடற்படையினரால் இலங்கை கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை - இந்திய அரசாங்களின் பேச்சுவார்தை அடுத்து, தமிழக மீனவர்கள் 126 பேரையும் விடுதலை செய்தனர். ஆனால் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது என இந்திய மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்திய மீனவர்கள் இந்திய கடலோரகாவல் படையினரிடம் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளர்.

இனிவரும் காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், படகுளை மீட்டுகொண்டு வரவேண்டும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum