Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று! நாடளாவிய ரீதியாக வாக்கெடுப்பு

Go down

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று! நாடளாவிய ரீதியாக வாக்கெடுப்பு Empty இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று! நாடளாவிய ரீதியாக வாக்கெடுப்பு

Post by oviya Sat Nov 07, 2015 1:15 pm

மட்டு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 03பேரை தெரிவு செய்வதற்காக 32வேட்பாளர்கள் போட்டியிடும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் 18607 பேர் மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் இடம்பெற்றது.

குறித்த தேர்தலில் ஒரு உறுப்பினரை தெரிவு செய்யும் பட்டிருப்பு தொகுதியில் இருந்து 08 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



இந்நிலையில் பட்டிப்பளைப் பிரதேசத்தில் 2வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் இப்பிரதேசத்தில் 25 இளைஞர் கழகங்களை சேர்ந்த 1242 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.தயாசீலன் குறிப்பிட்டார்.

இப்பிரதேசத்தின் வாக்களிப்பும் இன்று பிரதேச செயலகத்தில் அமைதியாக இடம்பெற்றது.

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று! நாடளவிய ரீதியாக வாக்கெடுப்பு

மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்புக்கள் இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதோடு இன்று இடம்பெறும் வாக்கெடுப்பினர் ஊடாக 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் லங்காசிறி செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஏனைய உறுப்பினர்கள் பல்கலைக்கழங்கள், பாடசாலைகள் மற்றும் விசேட தேவையுடையோர்கள் தெரிவு செய்யப்படும் எனவும் அதற்கான பிரத்தியேகமாக வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடாளாவிய ரீதீயில் சுமார் மூன்றரை இலட்சம் பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 334 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுவதோடு வலல்லாவிட, இரத்தினபுரி, காலி ஆகிய பகுதிகளில் அதிக மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாக கபே அமைப்பின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோள் தெரிவித்தார்.

இந்த தேர்தல் நடவடிக்கைகைளை கபே அமைப்பு கண்காணிப்பதோடு, இளைஞர்களுக்கு தேவையாக உதவிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான 549 இளைஞர் கழகங்கள் பங்குபற்றுவதோடு 16 ஆயிரத்து 835 இளைஞர்கள் தகுதி பெற்றுள்ளதேர்டு, 4 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 13 பேர் களத்தில் இறங்கியுள்ளனர்.

நுவரெலிஙயா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரேதச செயலகங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக எமது மட்டக்களப்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 32 வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 18607 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது.









அம்பாறையில் அமைதியான முறையில் வாக்களிப்பு

இலங்கையின் மூன்றாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 அணிக்கு ஆரம்பமாகி நாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 5 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக 49 பேர் போட்டியிடுகின்றனர் இங்கு நான்கு தொகுதிகளுக்கும் ஒவ்வொருவர் என தலா ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதுடன் போனஸ் உறுப்பினர் ஒருவரும் தெரிவு செய்யப்படுவார்.



அம்பாறை மாவட்டத்தனை பொறுத்தவரையில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 18920 பேர் தகுதி பெற்றுள்ளனர் அந்த வகையில் தொகுதி வாரியாக கல்முனையில் 2503 பேரும், சம்மாந்துறையில் 7406 பேரும், அம்பாறையில் 4735 பேரும், பொத்துவிலில் 7406 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum