Top posting users this month
No user |
போதைப் பொருளை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்!– ஜனாதிபதி
Page 1 of 1
போதைப் பொருளை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்!– ஜனாதிபதி
குறைந்த வருமானத்தை பெற்று வரும் குடும்பங்கள் தமது வருமானத்தில் மூன்றில் ஒரு வீதத்தை சிகரட் மற்றும் மதுபானங்களுக்காக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனால், மக்களை மது உட்பட போதைப் பொருள் பாவனையில் இருந்து தடுக்க சகல அதிகாரிகளின் உதவியும் அத்தியாவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டக்குழுக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போதைப் பொருள்களால் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நோயாளிகளாக மாறியுள்ளனர். இதனால், போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
அனுராதபுரத்தில் சிறுநீரக நோய் பரவி வருகிறது. அத்துடன் புற்றுநோயாளரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அனுராதபுரம் வைத்தியசாலையில் புற்றுநோயாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மக்களை மது உட்பட போதைப் பொருள் பாவனையில் இருந்து தடுக்க சகல அதிகாரிகளின் உதவியும் அத்தியாவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டக்குழுக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போதைப் பொருள்களால் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நோயாளிகளாக மாறியுள்ளனர். இதனால், போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
அனுராதபுரத்தில் சிறுநீரக நோய் பரவி வருகிறது. அத்துடன் புற்றுநோயாளரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அனுராதபுரம் வைத்தியசாலையில் புற்றுநோயாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum