Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Go down

கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு  Empty கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Post by oviya Tue Oct 13, 2015 12:46 pm

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரின் விசாரணைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 4 இழுவைப்படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மீனவர்கள் வருகை தந்த 4 இழுவைப்படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.



குறித்த இந்திய மீனவர்கள் 24 பேரும் தலைமன்னார் கடற்படையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

தற்போது குறித்த மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் 24 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum