Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிலத்திலும், கடலிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்: தூதுவர் தெரிவிப்பு

Go down

நிலத்திலும், கடலிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்: தூதுவர் தெரிவிப்பு Empty நிலத்திலும், கடலிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்: தூதுவர் தெரிவிப்பு

Post by oviya Tue Oct 13, 2015 12:42 pm

இலங்கையில் நிலத்திலும் கடலிலும் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றல் பணிகளுக்கு மேலதிகமாக 1.745 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீருக்குள் கண்ணி வெடியகற்றல் முயற்சிகளுக்கு உபகரண வசதி மற்றும் ஆதரவு வழங்கும் இரண்டு வார பயிற்சி அமர்வினை அண்மையில் திருகோணமலையில் அமெரிக்க கடற்படை குழுவொன்று நிறைவு செய்தது.

யுத்தத்தின் எச்சங்களாக காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் இலங்கையர்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிசெய்வதற்கு அமெரிக்கா உதவுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

நீருக்குள் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டறியும் சோனர் கருவி மற்றும் ரோபோக்களும் இலங்கை கடற்படையினருக்கு இதன்போது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நீருக்குள்ளே காணப்படும் எந்தவொரு பொருள் தொடர்பிலும் ஆராய்வதற்கும் கண்டறிவதற்கும் இலங்கை கடற்படையினரின் ஆற்றல் விரிவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் திருகோணமலை துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளையும் விஸ்தரிக்க முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum