Top posting users this month
No user |
இராணுவத்திடம் உள்ள மக்களின் காணிகளை விடுவித்து கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: டக்ளஸ்
Page 1 of 1
இராணுவத்திடம் உள்ள மக்களின் காணிகளை விடுவித்து கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: டக்ளஸ்
இராணுவத்தினரிடம் இருக்கும் பொது மக்களின் ஏனைய நிலங்களையும் விடுத்து கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிடிபியின் செயலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, வலிகாமம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வடக்கில் 615 ஏக்கர் நிலம் ஜனாதிபதியின் தலையீட்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் வாழ்வாதார வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரான தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக 10 வருடங்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, வலிகாமம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வடக்கில் 615 ஏக்கர் நிலம் ஜனாதிபதியின் தலையீட்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் வாழ்வாதார வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரான தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக 10 வருடங்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum