Top posting users this month
No user |
அனுமதிப் பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது
Page 1 of 1
அனுமதிப் பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது
அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு சென்ற இருவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹற்றன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் தருணத்தில் இருந்த இரண்டு கன்றுக்குட்டிகளையும் இறைச்சிக்காக அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது,
ஹற்றன்- டயகம பிரதான வீதியில் அக்கரப்பத்தனை பகுதியில் வைத்து இன்று காலை 6 மணியளவில் அக்கரப்பத்தனை பொலிஸாரால் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தும் போது, அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.
அதன் பின் மாடுகளை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹற்றன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் தருணத்தில் இருந்த இரண்டு கன்றுக்குட்டிகளையும் இறைச்சிக்காக அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது,
ஹற்றன்- டயகம பிரதான வீதியில் அக்கரப்பத்தனை பகுதியில் வைத்து இன்று காலை 6 மணியளவில் அக்கரப்பத்தனை பொலிஸாரால் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தும் போது, அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.
அதன் பின் மாடுகளை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum