Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைதியான யாழ்ப்பாணத்தினை உருவாக்க முயற்சிக்கின்றோம்: யூ.கே.வூட்லர்

Go down

அமைதியான யாழ்ப்பாணத்தினை உருவாக்க முயற்சிக்கின்றோம்: யூ.கே.வூட்லர் Empty அமைதியான யாழ்ப்பாணத்தினை உருவாக்க முயற்சிக்கின்றோம்: யூ.கே.வூட்லர்

Post by oviya Mon Oct 05, 2015 1:35 pm

அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமற்ற யாழ்ப்பாணத்தினை உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும் இடம்பெற்று கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களது நடத்தைகளில் செயற்பாடுகளில், மாற்றமோ சந்தேகமோ ஏற்பட்டால், உடனடியாக எமக்கு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக 18 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் நடத்தைகள் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களது பெற்றோரும் உறவினர்களும், சகோதரர்களும் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் கடந்த காலங்களில் பல சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum