Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் மக்களுடைய நிலங்களிலிருந்து படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்: இரா.சம்மந்தன்

Go down

தமிழ் மக்களுடைய நிலங்களிலிருந்து படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்: இரா.சம்மந்தன் Empty தமிழ் மக்களுடைய நிலங்களிலிருந்து படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்: இரா.சம்மந்தன்

Post by oviya Fri Oct 02, 2015 2:25 pm

தமிழ் மக்களுடைய நிலங்களிலிருந்து படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் படையினரின் நிர்வாகம் உடயடியாக நிறுத்தப்படவேண்டும் எனக் கூறியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், இந்த விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
நேற்றய தினம் யாழ்.வந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் இன்றைய தினம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வ லயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட வீமன்காமம், சாந்தை சந்தி, ஒட்டகப்புலம் ஆகிய பகுதி களுக்குச் சென்று மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் மக்களுடைய நிலமைகள் தொடர்பாக பேசியிருந்தார். இதன் பின்னர் ஒட்டகப்புலம் தேவாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர்,மேற்கண்டவாறு
தெரிவித்திருக்கின்றார்.

குறித்த சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியாளர்களுக் கு தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிக்கும் எண்ணம் சற்றும் கிடையாது. அவர்கள் எங்கள் வாழ்விடங்களை அழித்து தமக்கு கட்டிடங்களை அமைப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஆட்சிமாற்றம் உருவாகியிருக்கின்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் நடாளுமன்றில், ஆட்சி பலவீனமான ஆட்சியாக இருந்தது. ஆனால் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் பின்னதா க ஒரு பலமான தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கம் குறிப்பாக வலி,வடக் கு மற்றும் சம்பூர் விடயங்களில் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுத்திருக்கவேண்டும். இங்கே வந் து பார்க்கிறபோது தெரிகின்றது. ஒரு வீட்டிற்கு முன்பகுதியை விடுவித்திருக்கின்றார்கள்.

பின்பகுதியை விடுவிக்கவில்லை. மேலும் வேலிகளை போட்டு மக்களுடைய வாழ்விடங்களை தடுத்துவைத்திருக்கின்றார்கள். இந்த நிலை நீடிக்க முடியாது. மக்களுடைய வீடுகளை விடுவித்துவிட்டு தோட்டக்காணிகளை விடுவிக்காமல் இருப்பது ஒத்துக்கொள்ளக்கூடிய விடயமல்ல. எனவே நாங்கள் அரசாங்கத்திடம் கோருவோம் இரா ணுவ மயமாக்கலை தடுத்து தமிழ் மக்களுடைய நிலங்களை அவர்களிடமே வழங்குவதற்கு,படையினர் முதலில் மக்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

இதேபோன்று காணாமல்போனவர்கள் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுத்திருக்கவேண்டும். மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக தீர்மானத்திலும் இந்தக் காணி விடயம் தொ டர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. எனவே மக்கள் அதிகம் கவலையடைய தேவையில்லை. நாம் இந்த விடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான விடயத்தை நிச்சயமாக விரைவில் எட்டுவோம். என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum