Top posting users this month
No user |
சிறுவர்கள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் சுய தணிக்கையுடன் வெளியிட வேண்டும்: ஊடகத்துறை அமைச்சர்
Page 1 of 1
சிறுவர்கள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் சுய தணிக்கையுடன் வெளியிட வேண்டும்: ஊடகத்துறை அமைச்சர்
சிறுவர் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகத்திற்குள் கலந்துரையாடல்கள் உருவாகியுள்ளன. சிறுவர் விவகார அமைச்சருடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி முழுமையான கவனத்தை செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் உட்பட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகும் போது, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மேலும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், ஊடகங்கள் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் போது சுய தணிக்கை செய்து கொள்வது நல்லது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகத்திற்குள் கலந்துரையாடல்கள் உருவாகியுள்ளன. சிறுவர் விவகார அமைச்சருடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி முழுமையான கவனத்தை செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் உட்பட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகும் போது, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மேலும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், ஊடகங்கள் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் போது சுய தணிக்கை செய்து கொள்வது நல்லது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum