Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சபையில் இருந்து வெளிநடப்புச் செய்த சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Go down

சபையில் இருந்து வெளிநடப்புச் செய்த சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை Empty சபையில் இருந்து வெளிநடப்புச் செய்த சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Post by oviya Sat Sep 26, 2015 1:51 pm

தேசிய அரசாங்கத்தின் முதலாவது சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், அதனை புறக்கணித்து, சபையில் இருந்து வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.

எதிரணி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தின் அங்கம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், விவாதத்தை புறக்கணித்து விட்டு சபையில் இருந்து வெளிநடப்புச் செய்வது தவறானது என கட்சியின் உயர் பதவியை வகிக்கும் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிதி சட்டமூலம் குறித்து விமர்சித்து, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் மீது குறை கூறிய, எதிரணி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

சபையில் இருந்து வெளியேறிய இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலுக்கு எதிரில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கூட்டணி கட்சி என்பதால், எதிரணியில் அமர்ந்துள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது சாதாரண விமர்சனத்தை மாத்திரமே முன்வைக்க முடியும் எனவும் அந்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிரணியில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், தேசிய அரசாங்கத்திற்கும், அதன் கொள்கைகளுக்கு எதிராக விமர்சனம் செய்ய முடியாது. தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைக்கு இது முரணானது.

இதனால், அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இருந்து வெளிநடப்புச் செய்து, எதிர்ப்பில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum