Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டம்

Go down

அசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டம் Empty அசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டம்

Post by oviya Wed Aug 26, 2015 3:01 pm

அசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி அவரது ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலன் போது தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கண்டி மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்தார்.

ஏற்கெனவே மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் அவர், தனது வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்தார்.

எனினும் அவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படும் என்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையின் வாக்குறுதியை நம்பி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்ககொண்டு, தனது வாய்ப்பை இன்னொருவருக்கு விட்டுக் கொடுத்தார்.

தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நியமனத்திலும் அசாத் சாலி புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கக் கோரி அவரக்ள் ஜனநாயகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக நல்லாட்சியை உருவாக்கும் நோக்கில் முன்னின்று உழைத்தவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து அசாத் சாலிக்கான தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் நியாயங்களை எடுத்துக் கூறுவது இந்த ஜனநாயகப் போராட்டத்தின் நோக்கமாகும்.

இதன் ஒரு கட்டமாக கண்டி மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் சிலர் இன்று காலை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு கோட்டை நாஹவிகாரையில் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினால் தேசிய பட்டியல் வழங்குவதாக் வாக்குறுதியளிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு நியாயம் பெற்றுகொடுக்க முன்வர வேண்டும் என மாதுலுவாவே சோபித தேரரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum