Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னை மாணவி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவும் பொது மக்கள்

Go down

சென்னை - சென்னை மாணவி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவும் பொது மக்கள் Empty சென்னை மாணவி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவும் பொது மக்கள்

Post by oviya Sun Jun 28, 2015 3:13 pm

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க பொதுமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பாக்யா சிவராமன், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூக சேவை குறித்த படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர்.

பின்னர், உதவித்தொகை மூலம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட்டில் படித்து அங்கும் தங்கப்பதக்கம் வென்றார்.

அவர் தற்போது சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூகநலத் திட்டங்கள் குறித்த ஆதாரங்கள் சார்ந்த படிப்பு படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படிப்புக்கு உலகம் முழுவதும் இருந்து பாக்யா உள்பட 22 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க பாக்யாவுக்கு ரூ.31 லட்சத்து 74 ஆயிரம் தேவைப்படுவதால், அவர் "Crowd Funding" மூலம் மக்களிடம் உதவி கோரி நிற்கிறார்.

பொதுமக்கள் இதுவரை அவருக்கு ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் நிதி அளித்துள்ளனர்.

இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் ஒரு வாரத்தில் முடிவடைவதால், அதற்குள் தேவைப்படும் பணம் கிடைக்காவிட்டால் கல்விக் கடன் பெறலாம் என்ற எண்ணத்தில் உள்ளார் பாக்யா.

மேலும், போதிய பணம் கிடைக்காவிட்டால் கிடைத்த பணத்தை அளித்தவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அடுத்த கல்வியாண்டில் ஆக்ஸ்போர்டு செல்ல பாக்யா முடிவு செய்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum