Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னை மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்! ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Go down

சென்னை - சென்னை மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்! ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி Empty சென்னை மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்! ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Post by oviya Mon May 18, 2015 2:44 pm

இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில் பங்கேற்ற ஏராளமான தமிழ் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள் "சமரசமில்லை... சமரசமில்லை... ஒரே தீர்வு ஈழ விடுதலை" போன்ற கோஷங்களை தொடர்ந்து பலமாக எழுப்பினர்.

விசேடமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பெரிய தீபத்தை வைகோ ஏற்றி வைத்தார்.



தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இனப்படுகொலை நடைபெற்றது தொடர்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து மீது விசாரணை நடத்த வேண்டும் என என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.



ஏராளமான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு தீப அஞ்சலியும், மலரஞ்சலியும் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையை அடித்த இளைஞர்களால் மெரீனாக் கடலே அதிர்ந்தது.



நிகழ்வில் பங்கேற்ற வைகோ உரையாற்றுகையில்,

எங்கள் இருதயங்களில் இருந்து குருதி கொட்டுகிறது. ஈழப் போரின் இறுதி நாட்களில் பச்சிளம் பாலகர்கள், தாய்மார்கள், வயதானவர்கள் என்று எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள்.

ஒரு இனத்தையே கருவறுப்பதற்காக நிகழ்ந்த படுகொலைகள் தான் இவை. ஐ.நா மனிதவுரிமைக் கவுன்சிலிலும் நீதி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு ஒரே தீர்வு தான் வேண்டும். அது சுதந்திர தமிழீழம் மட்டுமே. இனப்படுகொலைக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முத்துக்குமார் உட்பட 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக மடிந்தும் நீதி கிடைக்கவில்லை. என்றார்.

மே17 மெரினா கடற்கரையில் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபயணம்!


வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு: கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால்
தமிழா நீ இனப்படுகொலை செய்யப்பட்ட இனமல்ல இனவழிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இனம்! மே18
சென்னை மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்! ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கொடிய போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வரவில்லை: விக்னேஸ்வரன்
பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாக்காலில் நினைவு நாள்
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக கீரிமலையில் சிறப்பு வழிபாடு
யாழ். பல்கலைக் கழகத்தில் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள்
காப்பாற்ற வழி ஏதுமின்றி கதறி அழுத நாளின் நினைவு
மே 18! இன்று தமிழரின் தேசிய துக்க நாள்! இழந்த உறவுகளை நினைவு கூருவோம்! இரா.சம்பந்தன் வேண்டுகோள்!
வடமாகாணம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum