Top posting users this month
No user |
Similar topics
பயந்தவனுக்கு பகலும் பகையே! துணிந்தவனுக்கு கடலும் சிறிதே!
Page 1 of 1
பயந்தவனுக்கு பகலும் பகையே! துணிந்தவனுக்கு கடலும் சிறிதே!
* நல்ல செயல்களைத் தொடங்குவதில் தாமதமோ, அச்சமோ சிறிதும் வேண்டாம். ஆனந்தத்தின் மறுபெயர் தான் நற்செயல்.
* நல்லவர்கள் இருக்குமிடம் நாடோ, காடோ, மேடோ, பள்ளமோ எதுவானாலும் இருக்கட்டும். அதுவே சிறந்த இடம். அங்கு வாழ்வதே நன்மையளிக்கும்.
* எவ்வித பயமும் கூச்சமும் இன்றி உலகத்தை எதிர்கொள்ளுங்கள். அச்சம் ஒரு அசவுகர்யம். பயந்தவனுக்கு பகலும் பகையாகும்.
துணிந்தவனுக்கு கடலும் சிறிதாகும்.
* அமைதியைக் காட்டிலும் மேலான ஆனந்தம் உலகில் கிடையாது. எப்போதும் அமைதியான சூழலில் இருக்க முயலுங்கள்.
* தனக்குத் தானே தலைவனாகவும், தனக்குத் தானே அடைக்கலமாகவும் மனிதன் இருக்க வேண்டும். உதவியை வேறொருவரிடம்
எதிர்பார்த்து நிற்க வேண்டாம்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருமனிதன் அறிஞனாகி விட மாட்டான். எதையும் அறிவுக்கண் கொண்டு பார்ப்பது அவசியம்.
* இருட்டில் இருந்து ஒளிமயமான பாதைக்குச் செல்பவனே அறிவாளி. அவர்களை சுகமோ, துக்கமோ சிறிதும் பாதிப்பதில்லை.
* அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிஞனாக ஒருநாள் வாழ்வது மேலானது.
* நெல் விளையும் வயலில் களை கேடு செய்வது போல, தீயஎண்ணம் மனிதனுக்கு கேடு விளைவிக்கிறது. மனதில் நல்ல எண்ணத்தை மட்டுமே விதையுங்கள்.
* உயிருள்ள வரையில் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றுங்கள்.
* உங்களுக்கு நீங்களே உதவி செய்ய காத்திருங்கள். மற்றவர்களின் உதவியை ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம்.
* தீய எண்ணத்துடன் செயல்படும் போது வண்டியை இழுக்கும் மாட்டின் காலைச் சக்கரம் பின்தொடர்வது போல துன்பம் தொடர்ந்து விடும்.
* பிறரிடம் எளிதாக குறை கண்டுபிடித்து விடலாம். ஆனால், தன் குற்றத்தைத் தானே அறிவது தான் சிரமமானது.
* ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் இரண்டில் ஒன்றைச் செய்யுங்கள். தூய்மையான நல்ல விஷயங்களைப் பேசுங்கள் அல்லது மவுனமாக இருந்து விடுங்கள்.
* பிறப்பினால் யாரும் இழிந்தவர்கள் அல்ல. அவரவர் நடத்தையே உயர்வையும், தாழ்வையும் உண்டாக்குகிறது.
* பல்லைக் காட்டி சப்தமிட்டுச் சிரிப்பது சிறுபிள்ளைத்தனம். தேவைப்பட்டால் இதழில் புன்னகையை மட்டும் வெளிப்படுத்துங்கள்.
* யாரும் யாரையும் தூய்மைப்படுத்த முடியாது. சுத்தம், அசுத்தம் இரண்டும் அவரவர் எண்ணம், செயல்களைப் பொறுத்த விஷயங்கள்.
* நற்செயல் புரிய சிறிதும் தாமதிப்பது கூடாது. ஏனென்றால் அந்த நேரத்திற்குள் மனம் மாறி விட நேரிடலாம்.
* உலகில் எதுவும் நிலையானது அல்ல. இதைச் சிந்திப்பதன் மூலம் "நான்' என்னும் ஆணவம் மறைந்து போகும்.
* வெளிப்புறத்தைக் கழுவுவதில் கவனம் செலுத்தியது போதும். மனமாகிய உள்புறத்தைக் கழுவுவதே அவசியமானது.
* வெறுப்புணர்வை விடக் கொடிய வியாதி வேறில்லை. யாரையும் உன்னோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இருப்பதில் திருப்தி கொண்டு வாழ்.
* செய்த நன்றியை ஒருபோதும் மறக்க கூடாது. கனிவான பார்வையும், பணிவான செயல்பாடும் மேன்மைக்கு வழிவகுக்கும்.
* ஒருமுறை செய்த தீமையை மீண்டும் ஒருமுறை செய்திருக்கும் மனவலிமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.
* பொய்யை உண்மையாலும், தீமையை நன்மையாலும், கோபத்தை அமைதியாலும் வெல்லப் பழகுங்கள்.
உற்சாகப்படுத்துகிறார் புத்தர்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum