Top posting users this month
No user |
Similar topics
அறிவோம் அவனை! அவன் அன்பே நாம் பெறும் கருணை!
Page 1 of 1
அறிவோம் அவனை! அவன் அன்பே நாம் பெறும் கருணை!
* கடவுள் ஒருவரே. அருள் வடிவான அவரே அருட்பெருஞ்ஜோதியாகவும், தனிப்பெருங்கருணை கொண்டவராகவும் விளங்குகிறார்.
* பசியால் வாடும் உயிர்களுக்கு உணவிடுவதும், துன்பப்படுவோருக்கு உதவி செய்வதுமே உண்மையான இறைவழிபாடு.
* தனிமனித ஒழுக்கமே நம்மை தெய்வநிலைக்கு உயர்த்தும். உலகிலுள்ள எல்லா உயிர்களும் நம் உடன்பிறப்புகளே.
* கீழ்த்தரமான எண்ணங்களை விட்டு விடுங்கள். இறைவன் மீது தளராத நம்பிக்கை கொள்ளுங்கள்.
* தினமும் அதிகாலையில் எழுந்து, திருநீறு அணிந்து கடவுளை தியானம் செய்தல் அவசியம்.
* பசியெடுத்த நேரம் ஆகாரம் உண்ணுவது அவசியம். ஆனால், அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்பது கூடாது.
* மாலை நேரத்தில் வெயில் மேனியில் படும் விதத்தில் சிறிது நேரம் உலாவுதல் வேண்டும். இரவில் படுக்கும் போது இடப் பக்கமாக படுப்பதே நல்லது.
* காரணமில்லாமல் பயம் கொள்ளக்கூடாது. எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பது அவசியம்.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் கடவுள் சிந்தனையோடு இருப்பது மிகவும் அவசியம்.
* வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு என்று உடலில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டிருப்பது கூடாது.
* கருணை உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கி உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.
* தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.
* உயிரையும், உடலையும் கூட மறக்கலாம். ஆனால், இந்த உலகைப் படைத்த கடவுளை ஒருபோதும் மறப்பது கூடாது.
* கண்ணால் காண முடியாத கடவுளை அன்புணர்வால் மட்டுமே அறிய முடியும். அன்பிருக்கும் இடமே அவனது இருப்பிடம். அவனது கருணையைப் பெறுவதே நமது நோக்கம்.
* லட்சியத்தை அடைய எத்தனை படிகள் என்று மலைக்க வேண்டாம். எல்லாப்படிகளையும் முயன்றால் கடந்து விடலாம்.
* உண்மையை நன்கு உணர்ந்தவனுக்கு, உண்மையற்றது எது என்பதை எளிதாகப் புரிந்து விடும்.
* பெரிதிலும் பெரிதாக கடல் போலவும், சிறிதிலும் சிறிதாக கடுகு போலவும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
* எங்கே ஆணவம் அறவே இல்லையோ, அங்கு அருள் ஒளி வீசத் தொடங்குகிறது.
* இரட்டைவேடமிடும் கபடதாரிகளிடம் நெருங்காதீர்கள். உண்மை மனம் கொண்ட நல்ல உத்தமர்களோடு உறவாடுங்கள்.
* ஆட்டுவிப்பவன் நம்மை ஆட்டுவிக்க, நம்மால் ஆவது ஏதுமில்லை. அவன் கையில் நாம் ஒரு கருவி என்பதை உணருங்கள்.
* நீங்கள் எதைச் செய்தாலும் அது பிறருக்கு இடையூறு செய்வதாக இருப்பது கூடாது. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டும் செய்யுங்கள்.
* அறிவுக்கண்ணைத் திறந்து பாருங்கள். உண்மையைக் கண்டறிய இது ஒன்றே வழி.
* இயற்கையோடு இணைந்து வாழ்வு நடத்துங்கள். குளிர்ந்த நீரில் நீராடியும், நறுமலர்களின் மணத்தை நுகர்ந்தும் மகிழுங்கள்.
* எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். மகிழ்ச்சியே உங்கள் உயிரைக் காப்பாற்றும் அமுதம்.
கடவுளை சொல்கிறார் வள்ளலார்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum