Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்!

Go down

நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்! Empty நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்!

Post by abirami Sat Mar 21, 2015 8:59 pm

நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்! Large_125715469




* இன்பத்தை தேடி எங்கும் அலைய வேண்டாம். அன்பு உண்டானால் இன்பம் உண்டு.
* அன்பு கொள்கையில் இருந்தால் மட்டும் போதாது. செய்கையில் வெளிப்பட வேண்டும். உன்னிடம் கோடி ரூபாய் இருந்தாலும், தேச நன்மைக்காக கொடுத்துவிட்டு ஏழையாகி விடத் துணிவாயானால், நீ அன்புடையவனாகக் கருதப்படுவாய்.
* நேரத்தை வீணாகக் கழிப்பது கூடாது. அதை பயனுள்ள வழியில் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் செலவழிக்க வேண்டும்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவதைப் போல, மனித சமூகம் நன்மையை நன்றாக உணர்ந்தும் கூட, தீமையில் சிக்கித் தத்தளிக்கிறது.
* பொய், நயவஞ்சனை, நடிப்பு, ஏமாற்றுதல் போன்ற கெட்ட வழிகளில் பொருள் ஈட்டக்கூடாது.
* மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்த மனதுடன் இருக்க முயலுங்கள். இடைவிடாமல் உழைத்து பெருமையுடன் வாழுங்கள். இவற்றையெல்லாம் செய்து, நன்மை கிடைக்கவில்லையென்றாலும், விதிவசம் என்று மகிழ்ச்சியோடு இருங்கள்.
* கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்து செலுத்துங்கள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி.. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தி விட்டாலே தெய்வத்தின் அருளைப் பெற்று விட முடியும்.
* துளியும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை உடையவன் எவனோ, அவனே கடவுள்.
* நன்றி மறவாத நல்ல குணம் மனிதனுக்கு வேண்டும். அதுவே அவனுக்கு பெரிய மூலதனமாக இருக்கும்.
* எதுவரை மனிதன் அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயத்தை விட்டு விட்டால் கிருதயுகம்(சத்தியயுகம்) அந்த கணமே வந்து விடும்.
* அமைதி, தைரியம், சக்தி, ஆற்றல், அருள், பக்தி சிரத்தை, பலம் போன்ற நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்.
* மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் இல்லை. அவனது மனதிற்குள் இருக்கும் பயம், கோபம், சந்தேகம், பொறாமை போன்றவையே எதிரிகள்.
* நம்பிக்கை இருந்தால் ஆகாய கங்கை கூட பூமிக்கு வந்துவிடும். எவ்வளவு பெரிய ஆபத்து வாழ்வில் குறுக்கிட்டாலும், நம்பிக்கை இருந்தால் வெற்றி கிடைத்து விடும்.
* நம்பிக்கை என்பது விடாமுயற்சி தான். முயற்சி உள்ளவனை துன்பங்கள் பயமுறுத்தாது.
* நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், சொன்னபடி நடந்து காட்டுவது அரிது.

சொல்கிறார் பாரதியார்

abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்!
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum